பழநியில் தயாராகும் தித்திக்கும் அச்சு வெல்லம்... விலை உயர்வு ஏன்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் தித்திக்கும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது தித்திக்கும் சர்க்கரை பொங்கல்தான்.

Jan 2, 2025 - 19:35
 0  4
பழநியில் தயாராகும் தித்திக்கும் அச்சு வெல்லம்... விலை உயர்வு ஏன்?

பழநி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் தித்திக்கும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது தித்திக்கும் சர்க்கரை பொங்கல்தான்.

பொங்கல் வைப்பதற்கு மிக முக்கியமானது அச்சு வெல்லம். பழநியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது. அதனை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் இயங்குகின்றன. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அச்சு வெல்லம் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow