பங்குச் சந்தை இன்ப்ளூயன்சர் அஷ்மிதா படேல் நிறுவனங்களிடமிருந்து செபி ரூ.53 கோடி பறிமுதல்
பங்குச் சந்தையில் இன்ப்ளூயன்சராக (செல்வாக்கு செலுத்துபவர்) உள்ள அஷ்மிதா படேலுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து ரூ.53.67 கோடியை செபி பறிமுதல் செய்துள்ளது.

பங்குச் சந்தையில் இன்ப்ளூயன்சராக (செல்வாக்கு செலுத்துபவர்) உள்ள அஷ்மிதா படேலுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து ரூ.53.67 கோடியை செபி பறிமுதல் செய்துள்ளது.
பங்குச் சந்தை தொடர்பான பயிற்சி வழங்குவதில் அஷ்மிதா படேலின் குளோபல் ஸ்கூல் ஆஃப் டிரேடிங் மிக பிரபலமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஸ்டாக்ஸ் மற்றும் டிரேடிங் தொடர்பான பல்வேறு படிப்புகளை வழங்கி வந்தது. அதில், " லெட்ஸ் மேக் இண்டியா டிரேட்" (எல்எம்ஐடி), "மாஸ்டர்ஸ் இன் பிரைஸ் ஆக்சன் டிரேடிங்" (எம்பிஏடி), மற்றும் " ஆப்ஷன் மல்டிபிளையர்" (ஓம்) ஆகியவை முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெற்ற சில முக்கியமான படிப்புகளாகும்.
What's Your Reaction?