நேரிடையாக வழிபட முடியாத மூங்கிலணை காமாட்சியம்மன்!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருந்து 7கி.மீ. தொலைவில் மூங்கிலணை காமாட்சி அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருந்து 7கி.மீ. தொலைவில் மூங்கிலணை காமாட்சி அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது.
மகா சிவராத்திரி முதல் 8 நாட்களுக்கு இங்கு திருவிழா களைகட்டும். மேலும், ஆடி மாதம் முதல் 3 நாட்கள் ஆடிப்பள்ளயத் திருவிழாவும் இத்தலத்தின் சிறப்பு. தொடர்ந்து, சித்திரை வருடப்பிறப்பு, விஜயதசமி, தைப்பொங்கல், கார்த்திகை திருநாள் உள்ளிட்ட நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மதிய நேரத்தில் இக்கோயிலில் நடை சாத்தப்படுவதில்லை. இதனால், காலை 6 முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். குலதெய்வம் குறித்த விவரம் தெரியாதவர்கள் பலரும் இந்த அம்மனையே குலதெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?