“நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... அது வதந்தியே!” - இளையராஜா

 “நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 

Dec 16, 2024 - 17:50
 0  5
“நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... அது வதந்தியே!” - இளையராஜா

சென்னை: “நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow