நவீன வேளாண் இயந்திரங்களால் லாபத்தை அறுவடை செய்யும் பழங்குடி விவசாயிகள்!

பாரம்பரிய விவசாய முறைகளை மட்டுமே நம்பி இருந்த பழங்குடி மக்களின் வாழ்வில், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க தொல் குடிவேளாண்மை மேலாண்மை திட்டம் - ஐந்திணை என்ற புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ள

Sep 14, 2025 - 15:35
 0  2
நவீன வேளாண் இயந்திரங்களால் லாபத்தை அறுவடை செய்யும் பழங்குடி விவசாயிகள்!

பாரம்பரிய விவசாய முறைகளை மட்டுமே நம்பி இருந்த பழங்குடி மக்களின் வாழ்வில், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க தொல் குடிவேளாண்மை மேலாண்மை திட்டம் - ஐந்திணை என்ற புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, வேளாண்மையில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதாகும். இத்திட்டத்தினை, சிறந்த முறையில் செயல்படுத்த தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத் துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்துக்கான, திட்டப் பகுதிகளாக பச்சை மலை (திருச்சிராப்பள்ளி) கொல்லி மலை (நாமக்கல்), கல்வராயன் மலை (கள்ளக் குறிச்சி, சேலம்), ஜவ்வாதுமலை (திருவண்ணாமலை), நெல்லிவாசல்நாடு (திருப்பத்தூர்) பீஞ்சமந்தை (வேலூர்), போதகாடு (தருமபுரி) கடம்பூர் மலை (ஈரோடு), மலையாளப்பட்டி (பெரம்பலூர்) மற்றும் நீலகிரி ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கும் 10 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. இதனைதொடர்ந்து இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி விவசாயிகளை ஒருங்கிணைத்து 15 விவசாய சங்கங்கள் பழங்குடியினர் நலத்துறை மேற்பார்வையில் உருவாக்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow