சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூனில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை
சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூன் மாதம் பயன்பாட்டுக் குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தி யுள்ளார்

சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 பணி மனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அந்த வகையில் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு, மின்சாரப் பேருந்துகளை ஜூன் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணி களை விரைவுபடுத்துமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
What's Your Reaction?