நடிகை ஹனி ரோஸ் புகார் - கேரள தொழிலதிபர் கைது

மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறத்தல் புகாரில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Jan 8, 2025 - 16:35
 0  11
நடிகை ஹனி ரோஸ் புகார் - கேரள தொழிலதிபர் கைது

கொச்சி: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறத்தல் புகாரில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வயநாட்டில் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்” என்றார். கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஹனி ரோஸ், "இன்று எனக்கு மிகவும் அமைதியான நாள். நான் முதல்வர் பினராயி விஜயனிடம் இந்த விவகாரத்தை எழுப்பியபோது சம்மந்தப்பட்டவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow