நடிகை புகார்: இயக்குநர் மீது வழக்குப் பதிவு
‘செக்ஸி துர்கா' உள்பட சில படங்களை இயக்கியவர் மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன்.

‘செக்ஸி துர்கா' உள்பட சில படங்களை இயக்கியவர் மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவர் சமூக வலைதளங்களில் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக, மலையாள நடிகை ஒருவர், கொச்சி எலமக்கரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
தனது பதிவுகளில் தொடர்ந்து தன்னை டேக் செய்து வருவதாகவும் தனது பெயரில் ஆடியோ குறிப்புகளைப் பகிர்ந்து வருவதாகவும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?