நடப்பு சீசனில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸ் வெற்றி - IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

May 1, 2025 - 00:30
 0  3
நடப்பு சீசனில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸ் வெற்றி - IPL 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புதன்கிழமை அன்று சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு 8-வது தோல்வியாக அமைந்தது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே தரப்பில் சாம் கர்ரன் 88 ரன்கள் விளாசினார். டெலவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஹாட்-ட்ரிக் உடன் 4 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சஹல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow