திரை விமர்சனம்: பாட்டல் ராதா
வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்யும் ராதா மணி (குரு சோமசுந்தரம்), மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்யும் ராதா மணி (குரு சோமசுந்தரம்), மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மது பழக்கம் கொண்ட ராதா மணி, ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிறார். அவரை மீட்க அசோகன் (ஜான் விஜய்) நடத்தும் குடி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார் அஞ்சலம். அங்கிருக்க முடியாமல் தவிக்கும் ராதா மணி, நண்பர்கள் சிலருடன் தப்பிக்கிறார். பிறகு அவருக்கு என்ன நேர்கிறது? குடியில் இருந்து மீண்டாரா? மனைவி குழந்தைகளோடு சேர்ந்தாரா, இல்லையா? என்பது கதை.
மதுவால் குடும்பங்கள் படும் அவமானத்தையும் அவஸ்தையையும் உணர்த்தும் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் அதே களத்தில் வந்திருக்கும் பாட்டல் ராதா, தனியானதுதான். இந்தப் படம் பேசும் அதே குடிநோயாளிகள் பற்றியும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் என்ற குடிநோயாளிகள் மறுவாழ்வு மையம் பற்றியும் ஏற்கெனவே ‘அப்பா வேணாம்ப்பா’ என்ற படம் வந்திருந்தாலும் குடி கொடுமையைப் பற்றி அழுத்தமாகவே பேசுகிறது, இப்படம்.
What's Your Reaction?