திருவாடானை: 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுகுடியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர், பழனியப்பன் கொடுத்த தகவலின் பேரில், அவ்வூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சசிக்குமார் உதவியுடன், கைக்கோளர் ஊரணியின் வடமேற்கில் இரண்டாக உடைந்த ஒரு கல் தூணில் இருந்த கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, படியெடுத்துப் படித்து ஆய்வு செய்தார்.
What's Your Reaction?