திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்படைக்கிறது.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்படைக்கிறது.
‘பரிமளம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஆழ்வார் திருமஞ்சன சேவை, ஒவ்வொரு ஆண்டும் உகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 4 முக்கிய நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும்.
What's Your Reaction?