தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்ட அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், கண்டிப்பாக தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் வைத்திருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், கண்டிப்பாக தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் வைத்திருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சியாமள ராவ் பங்கேற்றார். இதில் பக்தர்கள் பல கேள்விகளை கேட்டனர். ஹைதராபாத்தை சேர்ந்த முரளி என்பவர் கேட்கும்போது, தற்போது லட்டு பிரசாதம் ஈரமாக உள்ளதால் உதிர்ந்து போய் விடுகிறது என குறிப்பிட்டார். லட்டுவின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் தரமான நெய் உபயோகப்படுத்தப்படுவதால் அப்படி உள்ளது. உங்கள் சந்தேகம் குறித்து ஆய்வு செய்யப்படும் என நிர்வாக அதிகாரி சியாமள ராவ் பதிலளித்தார்.
What's Your Reaction?