தமிழகத்தில் உயரும் பூண்டு விலை: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.380-க்கு விற்பனை
தமிழகத்தில் பூண்டு விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் இன்று (நவ.8) பூண்டு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை: தமிழகத்தில் பூண்டு விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் இன்று (நவ.8) பூண்டு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான சமையல் வகைகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் சமைக்கப்படுவதில்லை. குறிப்பாக, அனைவரும் விரும்பி உண்ணும் பிரியாணிக்கு இவை முக்கியமான பொருளாகும். தமிழகத்தில் தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது.
What's Your Reaction?