தங்கம் விலை மீண்டும் உச்சம்: பவுனுக்கு ரூ.480 உயர்வு!
சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது.

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.60 என தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 என இன்று உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
What's Your Reaction?