டி20-ன் சிறந்த பவுலருக்கே இந்த கதி! - ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் அர்ஷ்தீப் சிங்

கவுதம் கம்பீர் வந்த பிறகே அவர் யாரை உட்காரவைத்து உட்காரவைத்து மீண்டும் அணியில் எடுக்கிறாரோ அவர்கள் கம்பீருக்கு பாடம் புகட்டுமாறு தங்கள் செயல் திறனை நிரூபித்து வருகின்றனர்.

Nov 3, 2025 - 12:30
 0  3
டி20-ன் சிறந்த பவுலருக்கே இந்த கதி! - ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் அர்ஷ்தீப் சிங்

கவுதம் கம்பீர் வந்த பிறகே அவர் யாரை உட்காரவைத்து உட்காரவைத்து மீண்டும் அணியில் எடுக்கிறாரோ அவர்கள் கம்பீருக்கு பாடம் புகட்டுமாறு தங்கள் செயல் திறனை நிரூபித்து வருகின்றனர். நேற்று அப்படி நிரூபித்தவர்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இன்னொருவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர்.

ஆகவே, உட்கார வைத்து எடுத்தால் நன்றாக ஆடுவார்கள் என்று இதற்கு கம்பீர் சப்பைக் கட்டுக் கட்ட முடியாது. மாறாக, ஏன் அணியை இப்படி நிரந்தரமில்லாத அந்தரங்க நூல் போல் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே கேள்வி. இவையெல்லாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரை தெரியாது, ஒருமுறை தொடர் தோல்விகளைச் சந்திக்கும்போது கம்பீரின் சாயம் வெளுக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow