சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதலிடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் ஈரானின் அமீன் தபதாபேயியுடன் பலப்பரீட்சை நடத்தினார் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றதுடன், அமீன் தபதாபேயியை (2.5) கீழே இறக்கி பட்டியலில் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார்.
What's Your Reaction?