சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணத்தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்காக அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணத்தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்காக அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து நாடு சுற்றுலாவுக்கு புகழ்பெற்றுள்ளது. அத்துடன் பெரும் பணக்காரர்கள் விரும்புவது சுவிஸ் வங்கிகள்தான். சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. அதுவே பணக்காரர்களுக்கு பாதுகாப்பாக கருதப்படுகிறது. அத்துடன், கரன்சியின் மதிப்பு குறைந்தாலும், பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டாலும், முதலீட்டாளர்களின் பணத்துக்கு சுவிஸ் வங்கிகள் பாதுகாப்பு வழங்குகின்றன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், கோடீஸ்வர்கள் என பல தரப்பினரும் சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தை போட்டு வைக்கின்றனர்.
What's Your Reaction?