சுய உதவிக் குழுக்களுக்காக ‘மின்மதி 2.0’ செயலி - உதயநிதி தொடங்கி வைத்தார்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்களின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘மின்மதி 2.0’ செயலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.p

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்களின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘மின்மதி 2.0’ செயலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகத் திறனையும், நிதி மேலாண்மையையும் மேம்படுத்துவதற்காக இணையவழி கற்றல் தளம் (e-learning) மூலம் ‘மின்மதி 2.0’ என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், அரசுத் திட்டங்கள் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் காணொளியாக வழங்கப்படவுள்ளன.
What's Your Reaction?