சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும் என்று வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். ‘கோட்’ படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு.

சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும் என்று வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
‘கோட்’ படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படம் தொடர்பாக நண்பரின் வீடியோ பதிவொன்றில் வெங்கட்பிரபு, “சிவகார்த்திகேயனை வைத்து தான் அடுத்த படம் இயக்கவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கிவிடுவோம் என நினைக்கிறேன். இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?