சிறுவாபுரி கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

சிறு​வாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்​கல்யாண பக்தஜன சங்கம் சார்​பில் நேற்று சிறு​வாபுரி பாலசுப்​பிரமணிய சுவாமி கோயி​லில்  நடைபெற்ற திருக்​கல்யாண நிகழ்​வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்.

Jan 6, 2025 - 09:45
 0  3
சிறுவாபுரி கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

பொன்னேரி: சிறு​வாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்​கல்யாண பக்தஜன சங்கம் சார்​பில் நேற்று சிறு​வாபுரி பாலசுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நடைபெற்ற திருக்​கல்யாண நிகழ்​வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்னேரி அருகே சிறு​வாபுரி​யில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்​களில் ஒன்றான பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில் அமைந்​துள்ளது.

இக்கோயி​லில், சிறு​வாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்​கல்யாண பக்தஜன சங்கம் சார்​பில் நேற்று 16-ம் ஆண்டாக திருக்​கல்யாண நிகழ்வு நடைபெற்​றது. இவ்விழாவை முன்னிட்டு, நேற்று காலை விநாயகர், மூலவரான பாலசுப்​பிரமணி​யர், அண்ணா​மலை​யார், உண்ணா​முலை அம்மன், ஆதி மூலவர், பைரவர், நவகிரகங்​களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow