சிறு ஐடி நிறுவனங்களுக்கு வாடகைக்கு இடம் தர புதுச்சேரி அரசு திட்டம்!
சிறு ஐடி நிறுவனங்கள் செயல்பட பணியாற்றும் இடத்தை தர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசில் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள் கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி: சிறு ஐடி நிறுவனங்கள் செயல்பட பணியாற்றும் இடத்தை தர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று பொதுப்பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் குறிப்பிட்டார்.
சிஐஐ சார்பில் புதுச்சேரியின் தொழில்துறை கண்காட்சி இண்டெக்ஸ் 2024 சுகன்யா கன்வெக்சன் சென்டரில் இன்று துவங்கியது. புதுச்சேரியின் உற்பத்தித் திறன்களைக் காண்பிக்கும் வகையில் இக்கண்காட்சி இரண்டு நாட்கள் நடக்கும். இதில் 70-க்கும் மேற்பட்ட அனைத்து நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இக்கண்காட்சியை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை இயக்குநர் ருத்ர கவுடு, சிஐஐ புதுச்சேரி பிராந்திய தலைவர் சண்முகானந்தம், துணைத் தலைவர் ஷமீர் காம்ரா, இன்டெக்ஸ் தலைவர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?