சினிமாவில் மேனேஜர்கள் கதை கேட்பது ஏன்? | ஆர்.கே.செல்வமணி ஓபன் டாக்!
நடிகர்களின் மேலாளர்களும் உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது. அவர்களுக்கு கதை பற்றிய அறிவு அறவே கிடையாது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை.

தற்போது வெளியாகும் தமிழ் ஹாரர் நகைச்சுவைப் படங்களில் பேயுடன் நட்பு பாராட்டி, அவற்றைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர் தமிழ் சினிமா நடிகர்கள். தற்போது ஒருபடி மேலே போய், பேயை வீட்டில் வளர்க்கும் ஒரு செல்லப் பிராணியாகவே சித்தரித்து திரைக்கதை எழுதி, அதில் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து படமாகவும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் டி.ஆர். பாலா.
‘பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ், பாவ்யா ட்ரிகா, ராதா ரவி, பால சரவணன், நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, வினோதினி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இப்படத்துக்கு ‘ஜின் - தி பெட்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசிய பேச்சு, தற்போதைய கோலிவுட்டின் சிக்கல்களை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது. அவர் பேசிய பேச்சின் முழு விவரம் வருமாறு:
What's Your Reaction?