சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பாரா? - இறுதி முடிவை இன்று எடுக்கிறது தேர்வுக்குழு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தேர்வுக்குழுவினர் இன்று (பிப். 11-ம் தேதி) எடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Feb 11, 2025 - 08:50
 0  4
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பாரா? - இறுதி முடிவை இன்று எடுக்கிறது தேர்வுக்குழு

அகமதாபாத்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தேர்வுக்குழுவினர் இன்று (பிப். 11-ம் தேதி) எடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow