சபரிமலை சந்நிதானத்தில் முதல் 2 நாளில் 100 தங்க டாலர்கள் விற்பனை!
சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பன் உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை நேற்று(ஏப்.14) தொடங்கியது. முதல் இரண்டுநாளில் 100 பக்தர்கள் இதனை பெற்றுள்ளனர் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனி: சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பன் உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை நேற்று (ஏப்.14) தொடங்கியது. முதல் இரண்டு நாளில் 100 பக்தர்கள் இதனை பெற்றுள்ளனர் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருந்தது. இதன்படி சபரிமலையில் நேற்று விஷூ பண்டிகை தினத்தை முன்னிட்டு விற்பனை தொடங்கியது. சந்நிதானம் முன்புள்ள கொடிமரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவசம், கூட்டுறவு மற்றும் துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன் கலந்துகொண்டு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
What's Your Reaction?