கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்வு: கிலோ ரூ.50-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மார்ச் மாதம் கிலோ ரூ.10 ஆக குறைந்திருந்த முருங்கைக்காய், பின்னர் படிப்படியாக அதிகரித்து வந்தது. தற்போது மொத்த விலையில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மார்ச் மாதம் கிலோ ரூ.10 ஆக குறைந்திருந்த முருங்கைக்காய், பின்னர் படிப்படியாக அதிகரித்து வந்தது. தற்போது மொத்த விலையில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளான கருணைக் கிழங்கு ரூ.40, கேரட் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.30, பீன்ஸ், பாகற்காய் தலா ரூ.25, சாம்பார் வெங்காயம் ரூ.20, உருளைக் கிழங்கு, கத்தரிக் காய், அவரைக் காய், புடலங்காய் தலா ரூ.15, பெரிய வெங்காயம் ரூ.14, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் தலா ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?