கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலம்: மிளகாய் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன்

கொரட்​டூர் ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோயி​லில் ஆடி திருவிழா கோலாகல​மாக நடந்து வரு​கிறது. இதையொட்​டி, பால் குடம் எடுத்​து, மிள​காய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்​தர்​கள் நேர்த்தி கடன் செலுத்​தினர்.

Jul 28, 2025 - 10:30
 0  3
கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலம்: மிளகாய் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன்

சென்னை: கொரட்​டூர் ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோயி​லில் ஆடி திரு​விழா கோலாகல​மாக நடந்து வரு​கிறது. இதையொட்​டி, பால் குடம் எடுத்​து, மிள​காய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்​தர்​கள் நேர்த்தி கடன் செலுத்​தினர். கொரட்​டூர் டிஎன்​எச்பி குடியிருப்பு 47-வது தெரு​வில் ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோ​யில் அமைந்​துள்​ளது.

சுமார் 50 ஆண்​டு​களுக்கு முன் புற்​றும், வேப்பமர​மும் மட்​டும் அமைந்​திருக்க, நாகவல்​லியை இங்கு பிர​திஷ்டை செய்​து, பக்தர்கள் வழிபட்​டனர். பக்​தர்​களின் வேண்டுதல்கள் கைகூட, பின்​னர் கோயி​லாக உருபெற்​று, ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் அருள்​பாலித்து வரு​கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow