குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி. இந்தியா தரப்பில் குல்தீப் மற்றும் அக்சர் படேல் அபாரமாக பந்து வீசினர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஆடுகளம் ஸ்லோவாக இருக்கின்ற காரணத்தால் முதலில் பேட் செய்து ரன் குவிக்க விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்தார்.
What's Your Reaction?