குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் குற்றால நாதர் உடனுறை குழல்வாய்மொழி கோயில் அமைந்துள்ளது. சுவாமி நடராஜரின் திருநடனம் நடைபெற்ற பஞ்ச சபைகளில் இக்கோயில் சித்திரசபையாக விளங்குகிறது.

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் குற்றால நாதர் உடனுறை குழல்வாய்மொழி கோயில் அமைந்துள்ளது. சுவாமி நடராஜரின் திருநடனம் நடைபெற்ற பஞ்ச சபைகளில் இக்கோயில் சித்திரசபையாக விளங்குகிறது.
புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை விட இனிமையான குரலை உடையவள் என்பதால் குழல்வாய்மொழி அம்மன் என பெயர் பெற்றாள். உயரமான கருவறையில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வலது கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை கீழே தொங்க விட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சி தருகிறாள்.
What's Your Reaction?