குறவஞ்சி: எஸ்.எஸ்.ராஜேந்திரன் விலகிய படத்தில் சிவாஜி!
மேகலா பிக்சர்ஸ் சார்பில் மு.கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன், ஏ.காசிலிங்கம் இணைந்து தயாரித்த படம், ‘குறவஞ்சி’. கதை, வசனத்தை மு.கருணாநிதி தனது தனித்துவமான ஸ்டைலில் எழுதினார். அவருக்கு நெருக்கமானவராக இருந்த ஏ.காசிலிங்கம் படத்தை இயக்கினார். இவர் எடிட்டராக இருந்து இயக்குநர் ஆனவர்.

மேகலா பிக்சர்ஸ் சார்பில் மு.கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன், ஏ.காசிலிங்கம் இணைந்து தயாரித்த படம், ‘குறவஞ்சி’. கதை, வசனத்தை மு.கருணாநிதி தனது தனித்துவமான ஸ்டைலில் எழுதினார். அவருக்கு நெருக்கமானவராக இருந்த ஏ.காசிலிங்கம் படத்தை இயக்கினார். இவர் எடிட்டராக இருந்து இயக்குநர் ஆனவர்.
இன்பபுரி அரசன் தனது நாட்டின் ஒரு பகுதியை தம்பி முகாரிக்குக் கொடுக்கிறார். இமயா என்ற முதல் அமைச்சரின் கைப்பாவையாகி அவரது சதியில் சிக்குகிறார், முகாரி. அதைக் கண்டு வெகுண்டெழும் கதிரவன் என்ற இளைஞர், மக்களைத் திரட்டுகிறார். இன்பபுரி இளவரசி குமரி, கதிரவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் கதிரவன் மீனவர் குலப் பெண்ணான பொன்னியை காதலிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
What's Your Reaction?