குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன: ஓர் இடத்துக்கு மல்லுக்கட்டும் 3 அணிகள்
ஐபிஎல் டி 20 தொடரில் குஜராத் அணியின் அபார வெற்றியால் அந்த அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளன. மீதம் உள்ள ஓர் இடத்துக்கு மும்பை, லக்னோ, டெல்லி அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 தொடரில் குஜராத் அணியின் அபார வெற்றியால் அந்த அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளன. மீதம் உள்ள ஓர் இடத்துக்கு மும்பை, லக்னோ, டெல்லி அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. 200 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி சாய் சுதர்சன் 61 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் விளாசிய 108 ரன்கள் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் 53 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் விளாசிய 93 ரன்கள் உதவியுடன் 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது.
What's Your Reaction?