கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் மோதி தாக்குதல்: ஜெர்மனியில் காயமடைந்த 7 இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவி
ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை மோதி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.

புதுடெல்லி: ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை மோதி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.
ஜெர்மனியின் மேக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, மிகப்பெரிய ஷாப்பிங் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலையில் செல்வோர் மீது மோதியபடி நிற்காமல் சென்றது. இதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
What's Your Reaction?