‘கிரெடிட் கார்டு’ அலர்ட் - இனி கடனை திருப்பி செலுத்த தாமதமானால் வட்டி எகிறும் ஆபத்து!

கிரெடிட் கார்டு கடன்களுக்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிக்க இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி இருப்பதால், கிரெடிட் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Dec 21, 2024 - 18:45
 0  5
‘கிரெடிட் கார்டு’ அலர்ட் - இனி கடனை திருப்பி செலுத்த தாமதமானால் வட்டி எகிறும் ஆபத்து!

புதுடெல்லி: கிரெடிட் கார்டு கடன்களுக்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிக்க இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி இருப்பதால், கிரெடிட் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரெடிட் கார்டுகளுக்கான கடனை குறித்த காலக்கெடுவுக்குள் கட்டத் தவறும் பட்சத்தில் கடன்களுக்கான வட்டி உச்சவரம்பு ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தேசிய நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி ஆணையம் (NCDRC) உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, சிட்டி வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எச்எஸ்பிசி உள்ளிட்ட நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow