காஞ்சியில் மழை, வெயிலில் வீணாகும் கடைகள்: சாலையோர வியாபாரிகளுக்கு பயன்படுமா?
இந்த கடைகளை வழங்குவதற்காக முதல்கட்டமாக 25 பயனாளிகள் தேர்வு நடைபெற்றது ஆனால் இந்த நடவடிக்கைகள் ஓராண்டை கடந்த நிலையில் கடைகள் இன்னும் யாருக்கும் ஒப்படைக்கப்படவில்லை.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்கள் சாலையோரத்தில் கடைகளை வைத்து நடத்துவதற்காக மாநகராட்சி மூலம் வாங்கப்பட்ட ஆயத்த கடைகள் பயன்படுத்தப்பாடமல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழையிலும், வெயிலிலும் போட்டு வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாநகராட்சி மூலம் சாலையோரத்தில் உடல் ஊனமுற்றோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் போன்றோர் கடை வைப்பதற்கும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் 50 ஆயத்த கடைகள் வாங்கப்பட்டன. தாம்பரம் மாநகராட்சிக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட இந்த கடைகளில் மிகுதியாக இருந்தவை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு எடுத்து வரப்பட்டன.
What's Your Reaction?