கருண் நாயரின் 3,149 நாள் காத்திருப்பு, இந்திய அணி 3,393 ரன்கள் - சாதனைத் துளிகள்!
ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஓரளவுக்குத் தேறி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஓரளவுக்குத் தேறி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
2ம் நாளான இன்று புதிய பந்தை எடுக்க இன்னும் 16 ஓவர்கள் உள்ள நிலையில் சுந்தரும், கருண் நாயரும் இந்த 16 ஓவர்களில் 45-48 ரன்கள் எடுக்க முடிந்தால் அதே சமயத்தில் விக்கெட்டுகளையும் இழக்காமல் இருந்தால் 250/6 என்ற நிலையிலிருந்து புதிய பந்து எடுத்த பிறகு தட்டித் தட்டி 300 ரன்களை எட்டி விடலாம். இந்தப் பிட்சில் இது நல்ல ரன்கள்தான்.
What's Your Reaction?