கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

கந்​தகோட்​டம் முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது ‘அரோக​ரா’ கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

Jul 17, 2025 - 10:15
 0  4
கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

சென்னை: கந்​தகோட்​டம் முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது ‘அரோக​ரா’ கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்னை பூங்கா நகர் கந்​தகோட்​டத்​தில் நூற்​றாண்டு பழமை​யான முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் உள்​ளது. இக்​கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்​துக்​கு​மாரசு​வாமி எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார். கடந்த 2013-ம் ஆண்​டும் ஜூலை 15-ம் தேதி இக்​கோயி​லில் கும்​பாபிஷேகம் நடந்​தது. கும்​பாபிஷேகம் நடந்து 12 ஆண்​டு​கள் முடிவடைந்த நிலையில், கந்​தகோட்​டத்​தில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் கும்​பாபிஷேகம் நடத்து​வதற்​கான பணி​கள் நடை​பெற்று வந்​தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow