கண்ணனின் அருள்மழையில் நனைவோம்..! | மார்கழி மகா உற்சவம் 20
சிவபெருமானே! அனைத்துக்கும் முதலாகவும், முடிவாகவும் உள்ள உனது திருவடிகளை நாங்கள் பணிகின்றோம். அனைத்து உயிர்களையும் படைக்கும் உன் பொற்பாதங்களை சரண் புகுகின்றோம். அனைத்து உயிர்களுக்கும் அவர்கள் வாழ்வில் இன்பம் அளிக்கும் மலரடிகளை வணங்குகின்றோம்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று |
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்; ||
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு |
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்; ||
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் |
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; ||
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை |
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 20)
What's Your Reaction?