‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷத்துடன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரர்கள் நன்கொடைகள் மூலம் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த பிப்.3-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
What's Your Reaction?