“ஒவ்வொரு முறையும் முதல் படத்தை இயக்குவது போன்ற உணர்வு” - மணிரத்னம் பகிர்வு
“ஒவ்வொரு முறையும் முதல் படத்தை இயக்குவது போன்ற உணர்வுடன் தான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன்” என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கோவா: “ஒவ்வொரு முறையும் முதல் படத்தை இயக்குவது போன்ற உணர்வுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன்” என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நடிகர்கள், இயக்குநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் இன்று இயக்குநர்கள் மணிரத்னம் - கவுதம் வாசுதேவ் மேனன் இடையிலான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கவுதம் மேனன் கேள்விகளுக்கு மணிரத்னம் பதிலளித்தார். அப்போது சினிமாவை குறித்த தனது பார்வையை பகிர்ந்துகொண்ட மணிரத்னம், “நான் முதல் படத்தை இயக்கும்போது, எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு மாஸ்டர் ஆக வேண்டும் என நினைத்தேன்.
What's Your Reaction?