ஒரு முழம் மல்லிப் பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் - ஆஸி. ஏர்போர்ட் சம்பவம்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஒரு முழம் மல்லிகை பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஒரு முழம் மல்லிகை பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6-ம் தேதி மெல்போர்ன் நகரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
What's Your Reaction?