ஒரு புதிய பாய்ச்சல்: நுண்ணுலகிலிருந்து மெய்யுலகிற்கு…!
மருத்துவத்துறையில் மூளை அலைகள் மற்றும் உயிர் காந்த அலைகளின் வடிவங்கள் துல்லியமாக வரையப்படும். நிகழ்தகவு (Probability) முறையில் செயல்படுவதால், செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி அசாதாரணமாக இருக்கும்.

அடுத்த தலைமுறைக்கான குவாண்டம் தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு, பாதை வகுத்து கொடுத்த மூன்று தலைச்சிறந்த, இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு, இந்த ஆண்டு, இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜான் கிளார்க் என்கிற பிரிட்டிஷ் விஞ்ஞானி, மிசேல் டெவொரே என்கிற ஃபிரெஞ்சு விஞ்ஞானி, ஜான் மார்டினிஸ் என்கிற அமெரிக்க விஞ்ஞானி இம்மூவரும் 2025க்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார்கள்.
What's Your Reaction?