ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ‘ப்ரீலேன்சர்ஸ்’ பணி அதிகரிக்கும்: கோவையில் மனிதவள அதிகாரிகள் தகவல்
சுயமாக செயல்படும் ‘பிரிலேன்சர்ஸ்’ பணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் அதிகரிக்கும். என, ‘சிஐஐ’ கருத்தரங்கில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை: சுயமாக செயல்படும் ‘பிரிலேன்சர்ஸ்’ பணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் அதிகரிக்கும். என, ‘சிஐஐ’ கருத்தரங்கில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) கோவை சார்பில் மனிதவள மேம்பாட்டுத்துறை கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, கோவை துணை தலைவர் ராஜேஷ் துரைசாமி பேசும் போது, “அடுத்த தலைமுறை தொழிலாளர்கள் சுறுசுறுப்பான சூழல் கொண்ட வேலைவாய்ப்பையே அதிகம் தேடுவார்கள். எனவே மனிதவள மேம்பாட்டுபிரிவு அலுவலர்கள் தலைமைத்துவத்தை வளர்க்கவும், திறமையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
What's Your Reaction?