ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி: இதுவரை இல்லாத அதிகபட்சம்
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ரூ.2.37 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ரூ.2.37 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்த வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாகவும், கடந்த 2024 ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியாக இருந்தன.
உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமாக கிடைத்த ஜிஎஸ்டி வசூல் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.9 லட்சம் கோடியாகவும், இறக்குமதி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.46,913 கோடியாகவும் இருந்தன.
What's Your Reaction?