ஏடிஎம் மையத்தில் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி: எப்போது, எவ்வாறு அமல்?
ஏடிஎம் மையத்தில் பிஎஃப் பணத்தை எடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி: ஏடிஎம் மையத்தில் பிஎஃப் பணத்தை எடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) 7.37 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக ‘இபிஎஃப்ஓ 3.0’ என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
What's Your Reaction?