எலத்தூர் குளத்தில் அரிய வகை ஆற்று ஆலா பறவைகள்
உலகளவில் அழியும் நிலையிலுள்ள பறவைகளில் ஆற்று

உலகளவில் அழியும் நிலையிலுள்ள பறவைகளில் ஆற்று ஆலா பறவையும் (River tern) ஒன்று. கடந்த வாரம் ஈரோடு நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளத்திற்கு 30க்கும் மேற்பட்ட ஆற்று ஆலா பறவைகள் வந்துள்ளதை பறவைகள் ஆர்வளர்கள் ஆவணப்படுத்தி உள்ளனர்.
அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை வரையறை செய்யும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் (Red list) அழியும் வாய்ப்புள்ள இனமாக (Vulnerable) ஆற்று ஆலா பறவைகளும் வரையறை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகளை சார்ந்து வாழும் ஆலா (Tern) பறவைகள் தமிழ்நாட்டில் 15 இனங்களும் இந்திய அளவில் 20 இனங்களும் வாழ்கின்றன. நீர் சார்ந்த சூழல் அமைப்பின் உணவுச் சங்கிலியில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
What's Your Reaction?