எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டத்தால் ரூ.1 லட்சம் கோடி அந்நிய செலாவணி சேமிப்பு: மத்திய அரசு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் எத்தனால் கலக்கும் திட்டத்தின் விளைவாக 30.09.2024 நிலவரப்படி சுமார் ரூ.1,08,655 கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Dec 12, 2024 - 19:30
 0  4
எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டத்தால் ரூ.1 லட்சம் கோடி அந்நிய செலாவணி சேமிப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் எத்தனால் கலக்கும் திட்டத்தின் விளைவாக 30.09.2024 நிலவரப்படி சுமார் ரூ.1,08,655 கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் சுரேஷ் கோபி, "கச்சா எண்ணெய் மீதான இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க அரசு ஒரு பலமுனை உத்தியைக் கடைப்பிடிக்கிறது. பொருளாதாரத்தில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரித்தல், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நகர்தல், எத்தனால் போன்ற புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிபொருள்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow