‘என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாடுவேன்’ - தாயகம் திரும்பிய அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளார் அஸ்வின்.

Dec 19, 2024 - 13:40
 0  2
‘என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாடுவேன்’ - தாயகம் திரும்பிய அஸ்வின்

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளார் அஸ்வின். சென்னை வந்துள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “உண்மையில் எனக்கு இப்படியொரு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைவரும் இங்கு வந்தமைக்கு நன்றி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக 2011 உலகக் கோப்பை வென்று வீடு திரும்பிய போது இப்படியொரு வரவேற்பு இருந்தது. அதே உணர்வை இப்போது பெறுகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow