என்ஓசி நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொ ருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்ஓசி) அளிக்க மறுக்கக் கூடாது’ என வங்கி நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது

May 25, 2025 - 14:20
 0  3
என்ஓசி நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்ஓசி) அளிக்க மறுக்கக்கூடாது’ என வங்கி நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலாஜி என்பவர் தனியார் வங்கி ஒன்றில் தனது டேங்கர் லாரிக்காக கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடன் தொகையை வட்டியும், முதலுமாக முறையாக திருப்பி செலுத்திய நிலையில், அதற்கான நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்ஓசி) வழங்கும்படி வங்கி நிர்வாகத்திடம் கோரினார். ஆனால் அதே வங்கியில் லீலாவதி என்பவர் வாகனத்துக்காக வாங்கிய கடன் தொகைக்கு பாலாஜி, ஜாமீன் உத்தரவாதம் அளித்துள்ள தைக் காரணம் காட்டி, அவருக்கு என்ஓசி வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow