“எனக்குப் பிடிக்கவில்லை!” - ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக ட்ரம்ப் சாடல்

போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரண்டுமே அதனை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

Jun 24, 2025 - 19:20
 0  4
“எனக்குப் பிடிக்கவில்லை!” - ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக ட்ரம்ப் சாடல்

வாஷிங்டன்: போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசுமானால், அது மிகப் பெரிய மீறல். எனவே, இஸ்ரேல் அதில் ஈடுபடக்கூடாது. உண்மை என்னவென்றால், இரண்டு நாடுகளுமே போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இருக்கிறார்கள். நேற்று நான் பார்த்த பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, நாங்கள் ஒப்பந்தம் செய்த உடனேயே இஸ்ரேல் குண்டுகளை வீசியது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் குண்டுகளை வீசி இருக்க வேண்டியதில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow