‘ஊகம் மட்டுமே’ - ஆர்சிபி அணி விற்பனை குறித்த தகவலுக்கு மறுப்பு
நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்பனை செய்வதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது அந்த அணியின் உரிமையை தன்வசம் வைத்துள் Diageo. இந்நிறுவனம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்பனை செய்வதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது அந்த அணியின் உரிமையை தன்வசம் வைத்துள் Diageo. இந்நிறுவனம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் அந்த பங்குச் சந்தையின் கண்காணிப்புத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது அந்நிறுவனம். தங்கள் அணியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஊகம் மட்டுமே என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
What's Your Reaction?